Pages
- NEWS
- SSLC
- +2
- TET
- TRB
- TNPSC
- G.Os
- SCHOOL EDUCATION
- DOWNLOAD
- SITES
- LINKS
- kalvisolai.com
- news.kalvisolai.com
- forms.kalvisolai.com
- tngo.kalvisolai.com
- employment.kalvisolai.com
- smartclass.kalvisolai.com
- smartnews.kalvisolai.com
- pallikalvi.kalvisolai.com
- sslc.kalvisolai.com
- plustwo.kalvisolai.com
- tnpsc.kalvisolai.com
- trb.kalvisolai.com
- textbook.kalvisolai.com
- tamilgk.kalvisolai.com
- onlinetest.kalvisolai.com
- audio.kalvisolai.com
- video.kalvisolai.com
- tamilarticle.kalvisolai.com
- doctor.kalvisolai.com
- kitchen.kalvisolai.com

Thursday, February 24, 2011
Tuesday, February 22, 2011
வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்
பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என் பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட் டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.
Friday, February 11, 2011
Tuesday, February 8, 2011
GOVT TIME TABLE
- SSLC TIME TABLE
- JUNE 2012 | SSLC TIME TABLE
- MARCH 2012 | SSLC TIME TABLE PLUS TWO TIME TABLE
- JUNE 2012 | PLUS TWO TIME TABLE
- MARCH 2012 | PLUS TWO TIME TABLE
- MARCH 2011 | PLUS TWO TIME TABLE
- MARCH 2010 | PLUS TWO TIME TABLE D.T.ED TIME TABLE
- JUNE | JULY 2012 | D.T.ED FIRST AND SECOND YEAR TIME TABLE. B.ED TIME TABLE
- MAY | JUNE 2012 | B.ED | TNTEU | TIME TABLE M.ED TIME TABLE
- MAY | JUNE 2012 | M.ED | TNTEU | TIME TABLE
Sunday, February 6, 2011
நேர் வழியில் கல்வி நெறி
கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: "14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்...' இது அமலுக்கு வந்ததா?
இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:
* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.
* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.
* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:
Tuesday, February 1, 2011
அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி
பாடம் படித்த நேரம்போக மீதி நேரம் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், புத்தகம் வாசித்தல் அனைத்தும் கனவாகிவிட்டன.
இப்படி விஞ்ஞான மயமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதனின் அனைத்து கௌரவங்களும் அவர்களது செய்கையால் நகைப்புக்கு ஆளாக வைக்கிறது.
பஸ், ரயில் இப்படிப் பயணம் செய்யும்போது பிறரைப்பற்றி கவலைப்படாமல் அலைபேசிகளில் பேசி வெறுப்பைச் சம்பாதிப்பவர்கள் ஏராளம். சொந்தப் பிரச்னை, அலுவலகம், கிண்டல் இப்படி எதுவாக இருந்தால் என்ன.. அதற்கென இடம், பொருள் பார்ப்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். இது வாகன ஓட்டிகளிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
ஏலே..மாப்ளே.. என்பதுடன் நிற்காமல் உரக்க சப்தமிட்டுப் பேசுவதால் பிற பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.
அதேபோல தங்களது குடும்ப ரகசியங்கள், விவரங்கள் ஆகியவற்றையும் பெருமையாகப் பேசுகின்றனர். இன்னும் சிலர் கம்பெனி நிலவரம், சக பணியாளர்கள் பற்றி மட்டரகமான விமர்சனம் என ஏகமாகப் பேசிவிடுகின்றனர்.
பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் யாரும் திருந்தியபாடில்லை. மாறாக, தங்களது சுயகௌரவத்தையும், தன்மானத்தையும் இழக்கின்றனர்.
பல இடங்களில் வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதுபோன்ற அசட்டுத்தனமான உளறல்களால் ஏற்படுகின்றன. பொதுஇடங்களில் பேசுவதைக் கேட்டும் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கும் இது இலகுவாக அமைந்துவிடுகிறது.
இதனால்தான் காவல்துறையினர் அவ்வப்போது வெளியூர் செல்வது குறித்தோ, பிற விவரங்கள் குறித்தோ பொது இடங்களிலோ, தொலைபேசிகளிலோ தெளிவாகப் பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.
இது ஒருபுறம் இருக்க வாகனங்களில் செல்வோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகளும், மாணவ, மாணவிகளும் பயணம் செய்கின்றனர்.
வாகனம் ஓட்டும்போது அப்படி என்ன தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இதைவிட பெரிய கொடுமை இருசக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடு. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்தான். ஆனால், அதற்கென நேரம், காலம் வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
இதுதவிர, அலுவலகங்களிலும் அலைபேசி தொந்தரவு பல வேலைகளுக்கு இடையூறாக உள்ளது. இது அரசு அலுவலகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் கடைகள், பாலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், தொலைபேசி கட்டணம் செலுத்துமிடம், ரயில் முன்பதிவு, பயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அலைபேசி பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும், பஸ்களில் அலைபேசி பேசுவோருக்கு நடத்துநர்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பேசுமாறு அறிவுரை வழங்கலாம்.
அலைபேசி பேசுவது அவரவர் உரிமைதான் என்றாலும், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதால் தமக்குப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் அலைபேசி பேசுவதை அறவே தவிர்த்தல் நலம். இப்படி அலைபேசிகளால் சில நேரங்களில், விலையாக உயிர்ப்பலிகளும் ஏற்படுவதால் அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்வதே சிறந்தது.
எஸ்.ரவீந்திரன்
Subscribe to:
Posts (Atom)
