டால்பின்கள் | இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல, இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் டால்பின் ஆகும். கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதி நீரில் வாழும் நன்னீர் டால்பின்களே நமது தேசிய நீர்வாழ் விலங்கு. டால்பின்கள் கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர் களுக்கு இது ஆச்சரியமாக தோன்றலாம். இருந்தாலும் இந்திய நன்னீர் டால்பின்கள் தனித்தன்மை மிக்க உயிரினம் என்பதால் தேசிய உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு அடுத்தபடியாக உயிரினங்களில் பகுத்தறிவோடு வாழும், நீர்வாழ் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நன்னீர் டால்பின்கள், கடல் டால்பின்களை காட்டிலும் உருவம், அளவு, குணத்திலும் நிறைய வேறுபட்டு காணப்படும். கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்திய நதிநீரில் வாழும் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். கங்கையில் வாழும் டால்பின்கள் 'சூசு' எனவும், சிந்து நதியில் வாழும் டால்பின்கள் 'புலான்' என்றும் அழைக்கப்படுகிறது.
Pages
- NEWS
- SSLC
- +2
- TET
- TRB
- TNPSC
- G.Os
- SCHOOL EDUCATION
- DOWNLOAD
- SITES
- LINKS
- kalvisolai.com
- news.kalvisolai.com
- forms.kalvisolai.com
- tngo.kalvisolai.com
- employment.kalvisolai.com
- smartclass.kalvisolai.com
- smartnews.kalvisolai.com
- pallikalvi.kalvisolai.com
- sslc.kalvisolai.com
- plustwo.kalvisolai.com
- tnpsc.kalvisolai.com
- trb.kalvisolai.com
- textbook.kalvisolai.com
- tamilgk.kalvisolai.com
- onlinetest.kalvisolai.com
- audio.kalvisolai.com
- video.kalvisolai.com
- tamilarticle.kalvisolai.com
- doctor.kalvisolai.com
- kitchen.kalvisolai.com

Monday, January 29, 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.