Thursday, February 16, 2023

வணிகம் 2022

பிப்.1: மத்திய பட்ஜெட் தாக்கல். பிப்.25: தேசிய பங்குச்சந்தை ஊழலில் அதன் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் கைது. பிப்.28: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் (செபி) முதல் பெண் தலைவராக மாதவி புரி புச் பதவியேற்பு. பிப்.26: எல்.ஐ.சி., நிறுவனத்தில் 20 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். மார்ச்6: தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது. மார்ச்12: வருங்கால வைப்பு நிதி (2021 - 2022 ) வட்டி விகிதம் 8.50ல் இருந்து 8.10 சதவீதமாக குறைப்பு. மார்ச்14: ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் நியமனம். மார்ச்18: தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல். மார்ச்20: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல். விவசாயிகள் இலவச மின் திட்டத்துக்கு ரூ. 5157 கோடி ஒதுக்கீடு. மார்ச்23: இந்திய ஏற்றுமதி வர்த்தகம் (2021-22) ரூ. 30 லட்சம் கோடியை எட்டி சாதனை. ஏப்.2: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து. மே1: ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி, வருமானம் அதிபட்சமாக ரூ. 1.67 லட்சம் கோடியை எட்டி சாதனை. மே4: ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மே12: ஏர் இந்தியா சி.இ.ஓ., வாக காம்பெல் வில்சன் பதவியேற்பு. மே17: பங்குச்சந்தையில் எல்.ஐ.சி., பங்கு (ஒன்று ரூ. 872) பட்டியலிடப்பட்டது. மே20: கனடாவில் 'மெர்சிடஸ் - பென்ஸ் 300 எஸ்.எல்.ஆர்.' கார்(1955 மாடல்) அதிக தொகைக்கு (ரூ. 1100 கோடி) ஏலம் போனது. ஜூன்24: மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ.,) தலைவராக எஸ்.எஸ்.முந்த்ரா பதவியேற்பு. ஜூன்24: 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் அய்யர் பதவியேற்பு. ஜூன்27: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக நிதின் குப்தா பதவியேற்பு. ஜூன்28: ரிலையன்ஸ் ஜியோ தலைவரானார் ஆகாஷ் அம்பானி. ஜூலை4: சென்னை முதலீட்டாளர் மாநாட்டில், ரூ. 1.25 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. ஜூலை18: தேசிய பங்குச்சந்தை தலைமை செயல் அதிகாரியாக ஆசிஷ் குமார் சவ்கான் பதவியேற்பு. ஜூலை22: சென்னையில் 25 ஆண்டாக செயல்பட்ட அமெரிக்காவின் போர்டு நிறுவன தொழிற்சாலை மூடப்பட்டது. ஆக.30: 'புளூம்பெர்க் பில்லியனர்' உலக பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றார் இந்தியாவின் கவுதம் அதானி. சொத்து மதிப்பு ரூ. 11.40 லட்சம் கோடி. அக்.1: இந்தியாவில் '5ஜி' தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அக்.19: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (83) வரலாறு காணாத சரிவை சந்தித்தது. அக்.22: 'ரிலையன்ஸ் நிறுவனம் '5ஜி' சேவையை தொடங்கியது. அக்.27: 'டுவிட்டர்' நிறுவனத்தை அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ. 3.5 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார். நவ.2: டுவிட்டரில் ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 660 கட்டணம் விதிக்கப்படும் என அறிவிப்பு. நவ.16: 'நிடி ஆயோக்' நிரந்த உறுப்பினராக அர்விந்த் விர்மானி நியமனம். நவ.17: 'மெட்டா' நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் பதவியேற்பு. நவ.30: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. நவ.30: சில்லறை வர்த்தகத்துக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

No comments:

Post a Comment

கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.